இளைய தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி-65' திரைப்படத்தின் வெளியீட்டை கொரோனா தொற்று நிலை தள்ளிப்போட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'தளபதி-65' படத்தின் முதல்கட்ட படடிப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடைபெற்ற நிலையில் சென்னையில் 2ம் கட்ட படப்பிடிப்பு நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை தாக்கம் காரணமாக தமிழ்நாட்டிலும் கொரோனா நெருக்கடி நிலை தீவரமடைந்துள்ளது.
இதையடுத்து 'தளபதி-65' திரைப்படத்தின் 2ம் கட்ட படப்படிப்பு பணிகள் முடங்கிப்போயுள்ளது.
முன்னதாக படத்தை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு தை பொங்கல் தினத்தில் வெளியீடு செய்வதற்கு படக்குழுவினர் தீர்மானித்திருந்த நிலையில் கொரோனா நெருக்கடி நிலை காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளதால் வெளியீடும் உத்தேசிக்கப்பட்ட தினத்தில் இடம்பெறாது தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாவதால் தளபதி 65 படத்தின் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை